Posts

Showing posts from March, 2021

சினம்கொள் திரை விமர்சனம்

Image
  இலங்கை சினிமா- சினம்கொள் இலங்கை சினிமாவிற்கு என ஓர் வரலாறே உண்டு. இலங்கையில் சிங்களத்திரைப்படங்கள், தமிழ்த்திரைப்படங்கள் என சினிமா பாதை காணப்படுகின்றது. 1972 இல் ஒரு மௌனச் செய்திச் சுருள் திரையிடப்பட்டது. பின் 1903 ஆசியாவின் திரைப்பட சங்கத்தில் கொழும்பு திரைப்படச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1947 "கடவுனு பொறன்துவ" முதல் சிங்களத்திரைப்படமாக இந்தியநாட்டு தயாரிப்பில் வெளியானது. சுதந்திரத்தின் பின் 1951 "பொடி புத்தா" திரைப்படம் இலங்கையின் சுயமான சினிமாவிற்கு அடித்தளம் ஆகும். 1956 "ரேகாவா" சிங்கள பாரம்பரியம் பறைசாற்றும் மாற்றுத்திரைப்படமாக வெளிவந்தது.  தமிழ் சினிமாவைப் பார்க்கில் சிங்கள நடிகர் நடிகைகளை வைத்து படமாக்கியதோடு சிங்கள மொழிப்படங்கள் மொழிமாற்றமும் செய்யப்பட்டன. 1951 "குசுமலதா" முதல் தமிழ் படமாக வெளியானது. 1951 "தோட்டக்காரி" முதல் வர்ணப்படமாக வெளியிடப்பட்டது. 1978 "சர்மிளாவின் இதயராகம்" தமிழில் வெளியிடப்பட்ட முழுநீள வர்ணத்திரைப்படமாகும். இலங்கையில் யுத்தம் காரணமாக சினிமாவில் வீழ்ச்சிப்போக்கு காணப்பட்டதைத் தொடர்ந்து 2006இல்...

உலக நீர் தினம்

Image
       ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் இன்றைய நிலையில் குடிநீர் பிரச்சினை என்பது பாரியதொரு பேசுபொருளாக அமைந்துள்ளது.  ஆபிரிக்க நாடுகள் மட்டுமன்றி ஆசிய நாட்டிலும் குடிநீர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது.  குடிநீர்ப் பிரச்சனையால்  3ம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

காட்சி விம்பம்

Image
 

வாசிப்பின் முக்கியத்துவம்

Image
நல்ல நூல் ஒரு நல்ல நண்பன்             நவீன உலகில் ஓய்வுக்காகக்கூட நேரம் ஒதுக்கமுடியாது அல்லல்படும்  நாம் நூல்களை வாசிக்கவா நேரம் செலவிடப்போகின்றோம்.  வாசிப்பினால் உண்டாகும் நன்மைகள் பற்றி இன்றைய சமூகம் நினைத்துப் பார்ப்பதில்லை. நூல்களை வாசிப்பதால் அறிவு வளர்ச்சியடையும். புத்துணர்வு கிடைக்கும். மனோவளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் இன்று தொலைபேசிக்குள் மூழ்கியிருக்கும் எம் சமுதாயம் இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி சிந்திப்பதில்லை. தொடர்ந்து தொலைபேசி பயன்படுத்துவதால் கண்பார்வை முதல் இதய பாதிப்பு மட்டுமன்றி மனோவியாதி ஏற்படும் வாய்ப்புக்களும் அதிகம். வாசிப்பு ஒருவனை  சமூகத்தில் உயர்த்தியே வைக்கும். நல்ல அறங்களைக் கற்றுத்தரும். வாசிப்பு அன்றாட வாழ்க்கையின் ஓர் அம்சமாக பழக்கப்படுத்திக்கொள்ள நூலகங்களை நாடப்பழகவேண்டும். அல்லது வீட்டிலேயே சிறிய நூலகம் அமைத்து புத்தகங்களை வைத்து வாசிப்பு பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். வாசிப்பதால் மனிதன் பூரணமடைவான் என்பதே உண்மை.     

வழக்கிழந்துவரும் பஜனை வழிபாடு

Image
  இராமர் பஜனை                    வருடம் தோறும் மார்கழி மாதம் இந்துக்கள் வழிபடும் ஒரு வழக்காக இந்த இராமர் பஜனை காணப்படுகிறது. இவ் வழிபாடு ஒரு மாத திருவிழாக்கோலமாக மலையகத்திலும் வடக்கு பகுதிகளிலும் வழிபடப்படுகின்றது. இவ் வழிபாடு இராமர்,சீதா,ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெறும். வடக்குப் பகுதிகளில் கிராமப்புறங்களில் இன்றும் ஒரு சில இராமர் ஆலயங்களில் இவ் வழிபாட்டு முறையைக் காணலாம்.  தமிழிற்கு மார்கழி 1 விளக்கு வைக்கப்பட்டு கம்ப விளக்கில் எண்ணை ஊற்றி, பக்தர்கள் காப்பு அணிந்து, ஊர் ஊராக சாமி சுற்றி பஜனை பாடல் இசைத்து, வழிபாடு மேற்கொள்வார்கள். சாமி ஆடுதல்,குறி சொல்லுதல்,தீ மிதித்தல் போன்ற பாரம்பரியத்தை பேணும் சடங்குகள் இடம்பெறும். இன்று இக்கிராமிய வழிபாட்டு முறைகள் வழக்கிழந்து போகும்நிலையே காணப்படுகின்றது.

இளம் தொழில்முனைவோருக்கான 1 லட்சம் காணிவழங்குதல் திட்டம்

Image
              கடந்த 2020 இல் இலங்கை அரசின் ஒரு திட்டமாக 100,000 காணித்துண்டுகளை வழங்கும் நோக்கில் பொதுமக்கள் மத்தியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் இவ்வாண்டு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக்கள் அனுப்பப்பட்டு கட்டம் கட்டமாக நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறுகின்றன.100,000 காணித்துண்டுகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் நேர்முகப் பரீட்சைகளில் புள்ளித்திட்டமிடலின் அடிப்படையிலேயே பயனாளிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.   இதன் பொருட்டு பல விடயங்களை நேர்முகப் பரீட்சையில் உள்ளடக்கியுள்ளனர். 1. தேசிய அடையாள அட்டை (NIC) கொண்டு செல்ல வேண்டும் 2. கிராமசேவகர் இடம் பெற்ற வதிவிட சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் 3. சமாதான நீதவானிடம் (JP) பெற்ற - உங்களிடம் பயிர்ச்செய்கைக்கான காணி இல்லை என்ற  சான்று உறுதிப்படுத்த வேண்டும். 4. உங்களது கருத்திட்டம் எது தொடர்பானது என கூறவேண்டும் (விவசாயம், உற்பத்தி, தொழிற்சாலை) பின்வரும் புள்ளியிடல் திட்டத்தை கவனத்தில்கொள்க. 1. உங்களுடைய வயது 18 - 45 எனின் - 15 புள்ளிகள் 2. உங்களுக்கு தொழில் தொடர்பான அறிவு காணப...

பெண்தலைமைத்துக்குடும்பங்கள்

Image
                   வடக்கில் யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் பல பெண்கள் கணவரை இழந்துவிட்ட நிலையில் தமது பிள்ளைகளை, குடும்பத்தை தாங்குகின்ற தூண்களாக மாறியிருக்கின்றனர். யுத்தத்திற்கு முன்னர் சீரான கட்டுக்கோப்பான வாழ்வியலமைப்பானது யுத்தத்தின் பின்னர் காணப்படவில்லை என்பதே யதார்த்தம். ஒரு பெண் மனதளவில் தைரியசாலி எனினும் இச்சமூகத்தில் ஆணுக்கு நிகராக குடும்பத்தைக் கொண்டு நடத்துவது மிகவும் போராட்டகரமானதே. சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் ஆணைவிட பெண்ணிற்கே அதிகம். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், பிற ஆண்களுடன் நட்பு பாராட்டக்கூடாது, அதிலும் கணவனை இழந்த பெண் மறுமணம் செய்வது எமது கலாசாரம் இல்லை, இப்படியாக சமூகத்தில் பெண் மீதான அபிப்பிராயம் உள்ளது.  ஆனால் இதெல்லாம் கடந்து ஒரு குடும்பத்தின் ஆணிவேராக குடுப்பப் பொறுப்போடு கூலிவேலை செய்துகூட குடும்பத்தை பார்க்கும் பல பெண் தலைமைகளை வடக்கில் குறிப்பாக வன்னிப்பகுதியில் காணலாம். இவர்கள் சமூகப்பொறுப்புடன் தம் பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டுசெல்ல பல போராட்டங்களை சந்திக்கின்றனர் இவர்களுக்கு...

ஆரண்யகாண்டம் திரைப்பார்வை

திரைப்படம் அசையும் படிமம் திரைப்படமாகும். திரைப்படம் என்பது ஒரு கதையை அசையும் வடிவமாக உருவாக்குதல் ஆகும். இது ஒரு கலை எனலாம். திரைப்படங்கள் முழுநீள படங்களாகவும் குறும்படங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. தமிழில் முதல் முழு நீளப்படமாக காளிதாஸ் 1931 இல் வெளியானது. இத் திரைப்படங்களை பல வகையாகப் பிரிக்கலாம். முக்கியமாக 14 வகைகள் காணப்படுகின்றன. வுhந றநளவநசn அழஎநைஇ வுhந பயபௌவநச அழஎநைஇ வுhந குடைஅ ழெசைஇ வுhந ளுஉசநறடியடட உழஅநனலஇ வுhந அநடழனல னசயஅயஇ வுhந ளவைரயவழைn உழஅநனலஇ வுhந hழசசழச கடைஅஇ வுhந ளஉநைnஉந கiஉவழைn அழஎநைஇ வுhந றயச கடைஅஇ வுhந யஎநபெநச கடைஅஇ வுhந நிiஉ கடைஅஇ வுhந ளிழசவள கடைஅஇ வுhந டீழைபசயிhiஉயட கடைஅஇ வுhந ளிழசவள கடைஅஇ வுhந ளயவசைந கடைஅ போன்றவை அவையாகும்.   film noir இச் சொல் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டில் பயன்படுத்தப்பட்டது. 1944-1954 காலகட்டத்தில் இத்திரைப்பட வருகை அதிகமாக இருந்தபோது விமர்சகர்கள் குடைஅ ழெசை அழஎநைள என குறிப்பிட்டனர். இது ஊசiஅந னுசயஅயள வகை திரைப்படங்களைக் குறிப்பன. முதல் ஆங்கில பிலிம் நோயர் திரைப்படமாக  1941 இல் வெளியானது. திரைப்படங்கள் பல கடந்தகாலங்களில் தமிழிலும் வெ...

மகாசிவராத்திரி

Image
                சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. ஒவ்வொரு வருடமும் தமிழ் பஞ்சாக்கப்படி மாசி மாத இறுதியில் சிவனுக்காக அனுஸ்டிக்கப்படும் விரதம் சிவராத்திரியாகும். இவ்வருடமும் வழமைபோல் நாடெங்கிலும் பல சிவாலயங்களில் உரிய சுகாதார முறைப்படி வழிபாடுகள் இடம்பெற்றன. குறிப்பாக திருக்கேதீஸ்வரம்,திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம்,கொக்கட்டிச்சாலை தான்தோன்றீஸ்வரம்,ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் என பல சிவாலயங்களிலும் விசேட வழிபாடுகளை காணமுடிந்தது.

ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகும் அடையாளங்கள்-வெடுக்குநாறி மலை

Image
            ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்படும் நிலையில் உள்ள வட பகுதியின் மலைக்கோயில்கள் தமிழரின் பாரம்பரியம்,பூர்வீகம் என போற்றப்படும் பல இடங்கள் இலங்கையின் வடபகுதியில் காணப்படுகின்றன. இவை தமிழ் பூர்வீகர்களின் நினைவுவழிவந்த அடையாளச்சின்னங்களாகும். இலங்கையை பொறுத்தமட்டில் நில ஆக்கிரமிப்பு என்பது எழுதப்படாத விதி ஆகும். கடந்த சில ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பு தொடர்பான கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் அதிகளவு மக்கள் மத்தியில் பேசுபொருளாக காணப்பட்டது. குடியேற்றங்கள், விகாரை அமைப்பு, பயிர்ச்செய்கை நடவடிக்கை என பல நோக்கங்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அண்மைய காலத்தில்கூட பேசப்பட்ட நில ஆக்கிரமிப்புக்களாக வவுனியா வடக்கில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர், முல்லைத்தீவு தெற்கில் குருந்தூர் மலை ஐயன் இன்னும் பேசப்படாத பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றே வருகின்றன. இவற்றின் வரலாற்றையும் தற்போதைய நிலைப்பாட்டையும் பேசுவது காலத்தின் தேவையாகும்.  இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவிலாகும். இக் கோயி...

சர்வதேச மகளீர்தினம்

Image
  சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ம் திகதி உலகளாவிய ரீதியில் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில் சிறப்பிக்கப்பட்டு வரப்படுகிறது.  பெண்களுக்கான உரிமைகள், கடமைகள் பற்றி பலர் பேசிவந்தாலும் அவர்களுக்கான வெளி இச்சமுகத்தில் எத்தகையது என்பதை நினைக்கவேண்டியது முக்கியமானதொன்றாகும். 

தாவர சக்தி நாள்

Image
உயிரின வாழ்க்கைக்கு அடிப்படை தாவரங்கள் மார்ச் 7  தாவர சக்தி நாள் மனித வாழ்வியல் இயற்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். ஆரம்பத்தில் இயற்கையுடனே வாழ்ந்த நாம் இன்று இயற்கையை அழித்து வாழத்தொடங்கியிருக்கின்றோம். பூமியில் தாவரங்கள்,மரம்,செடிகள் ஏன் முக்கியம் என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.  இந்த பூமியில்  உள்ள நிலப்பரப்பு  முழுவதும் ஏன் நீரிலும்  கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள்  வாழ வழி செய்பவை தாவரங்கள். தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளிலும்  சிலவற்றை மட்டுமே நாம் உணவாக மருந்தாக  பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி கோதுமை சோளம்  போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம்  இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட பல மில்லியன்   வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெற்றோல், மண்ணெண்ணை, டீசல்  ஆகியவை கிடைக்கின்றன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் என்று கூறினால் மிகையாகாது. உயிரின சுவாசத்திற்கும்  சுகமான தட்...

எதை பிழை என்கிறாய்

Image
  எதை பிழை என்கிறாய் அறன் தவறும் நீ வள்ளுவன் தந்த குறளை பிழை என்கிறாயா?  செஞ்சொல் தவறும் நீ கம்பனின் கவியை பிழை என்கிறாயா? பார்வை பிறழும் நீ அன்னையின் பாசம் பிழை என்கிறாயா? நெறி தவறும் நீ நீதியை பிழை என்கிறாயா? எண்ணம் சிதறும் நீ அன்பை குறை என்கிறாயா? உதவியை மறந்த நீ கொடையை ஏன் என்கிறாயா? எதை பிழை என்கிறாய்

முத்தையன் கட்டு குளம்

Image
வன்னியில் முல்லை மண்ணின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் முத்தையன் கட்டுக் குளம் அமைந்துள்ளது. வடமாகாணத்தின்  மிகப்பெரிய நீர்ப்பாசனக் குளம் இதுவாகும்.  இதன் மூலம் நன்னீர் மீன்பிடி மற்றும் விவசாயம் சிறப்புற்று விளங்குகிறது.  இக்குளம் 1959 விவசாய அபிவிருத்தி நோக்கில்  கட்டப்பட்டது. அதுமட்டுமன்றி வரலாற்றுச் சிறப்புமிக்க குளமாகவும் குறிப்பிடப்படுகிறது.  இவ் முத்தையன் கட்டுக்குளம் வன்னியின் முக்கியமானதும் அழகியதும் அதிகமான மக்கள் சென்று பார்வையிடும் இடமாகவும் காணப்படுகின்றது.

ஆரோக்கியம் தினப்போராட்டமே!

  ‘எனது பிள்ளைகளுக்கு சுவையான ஆரோக்கியம் மிக்க உணவுகளை சமைத்துக்;கொடுக்க தினமும் பாடுபடுகின்றேன் ஆனால் இந்த பிள்ளைகள் கடைச்சாப்பாட்டையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் பிள்ளைகளுக்கு நோய்கள் வருமோ என எனக்கு பயமாக உள்ளது’  இது ஒரு தாயின் அங்கலாய்ப்பு. ஆம் ஆரோக்கியம் என்பது மனிதன் நோயின்றி உயிர் வாழ்வதற்கு மிகமிக அத்தியாவசியமானது. நேரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு வேலை,பணம்,நவீனம் என ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் தன் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறிவிட்டான் என்றே கூறவேண்டும். மனிதன் மேல்நிலைக்கு செல்ல முயலும்போது உடல் உறுதியாக காணப்பட்டாலே அவன் அந்நிலையை அடையமுடியும். உடல் சோர்ந்து நோய்களும் உண்டாகும் பட்சத்தில் சீராக இயங்க முடியாதுபோகிறான். இன்றைய காலகட்டத்தில் தொழிஙட்பம்,வேலைச்சுமை,சீரற்ற உணவுப்பழக்கவழக்கம் போன்ற காரணங்களால் மன அழுத்தம்,நோய்கள் என பல பிரச்சினைகள் ஏற்படுவதால் இறப்பு,தற்கொலை,வன்முறை போன்றனவற்றை சந்திக்க நேரிடும்.இந்த ஆரோக்கியம் என்ற விடயத்தினுள் உணவுப்பழக்கவழக்கம்,சுகாதாரம்,தியானம் என பல விடயங்கள் உள்ளடங்குகின்றன. முன்பு நாம் இயற்கை உணவு, வியர்வை சிந்திய உழைப்பு என...

கரைசேரா படகு

Image
  வலிகளும்  எனக்குள்ளே வரமாக.. ! வழி தேட என் விழியில்லை சுகமாக.. ! வாழ்க்கையும் எனக்கில்லை திடமாக.. ! நான் நிற்பதோ துடுப்பிழந்து தத்தளிக்கும் படகாக....!!

முல்லைத்தீவு கடற்கரை மாலைச் சந்தை

Image
 முல்லை மண்ணானது மருதமும் நெய்தலும் இணைந்த பிரதேசமாகும். இங்கு வாழ்பவர்களின் பிரதான தொழிலாக விவசாயமும்,மீன்பிடியும் காணப்படுகின்றது.   கடற்கரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.நீண்ட நாட்களுக்கு பின்னர் கடற்கரைக்கு செல்லும் எண்ணம் தோன்ற மாலை வேளை நானும் என் நண்பியும் முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றோம். மாலை நேரம் கடற்கரையின் அழகை கண்டு கழிப்பதில் ஓர் ஆனந்தமே.  முல்லைத்தீவில் மாலை நேர சந்தை பிரபல்யமானதொன்றாகும். காலையில் மீன்பிடிக்க சென்றவர்களும் கரைவலை இழுக்கும் மீனவர்களும் மாலை வேளையில் சந்தை வியாபாரத்தில் ஈடுபடுவர்.  பத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் இணைந்து வலையிழுத்தனர் அப்போது "ஏலேலைலோ" என வேலைக் களை தெரியாதிருக்க பாடல் பாடி வலையிழுத்தனர். கரையை நோக்கி வலையிழுத்த பின்னர் மீன்கள் வாளை,நெத்தலி,சூடை,பாரை என வகைப்படுத்தப்பட்டதும் சந்தைக்கு கொண்டுசென்று வியாபாரத்தில் ஈடுபட்டனர்.  மாலைவேளை உடன் மீன்வாங்க அதிகமானோர் வருவதை காணமுடிந்தது. இவ் மாலைச்சந்தை புதுவித அனுபவமாகக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன் இதற்கு பின்னால் இருக்கும் மீனவர் வாழ்வியலை எண்ணிப்பார்த்...

உலக வன உயிரிகள் தினம்

Image
 இன்று மார்ச் 3 உலக வன உயிரிகள் தினம் தினமாகும். சர்வதேச அளவில் அழிந்துவரும் உயிரினங்களை காக்கும் நோக்கில் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய காலத்தில் அபிவிருத்தி எனும் பெயரில் சட்டவிரோதமாக காடுகளை அழிப்பதால் காட்டில் வாழும் யானை,புலி,சிங்கம் உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி காட்டுத்தீ, காடழிப்பால் பல உயிரினங்கள் இடம்பெயர்ந்து விவசாயம் செய்யும் பகுதிகளுள் வருகின்றன. 2013 ம் ஆண்டு ஐ.நா பொதுக்கூட்டத்தில் மார்ச் 3 உலக வன உயிர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும்  அனுஸ்டிக்கப்படுகிறது. உலகில் பல வனவிலங்குகளும் செடிகொடிகளும் உள்ளன. வன உயிரினங்கள் அழிவடைவதால் உணவுச்சங்கிலி,உணவு வலை குழப்பமடைந்து சூழல் சமநிலை பாதிக்கப்படும் . ஆகவே சூழல் சமநிலையாக இருக்க வன உயிர்களை பாதுகாப்பது அவசியமாகின்றது. மனிதர்கள் இயற்கையை அதிகளவில் சுரண்ட தொடங்கிய பின் இயற்கை சீற்றத்திற்கு இலக்காகி இருக்கின்றோம். இது எம்மால் ஏன் உணரமுடிவதில்லை என்பதே கேள்வி. யானை,புலி போன்றன தந்தத்திற்காகவும் தோலுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.  அண்ம...

2020 க.பொ.த சாதாரணதர பரீட்சை

Image
                நாட்டின் கொரோனா நிலமையின் பின்னரான 3வது பரீட்சை 01.03.2021 இன்று ஆரம்பமானது. கொரோனா தொற்று காரணமாக பிற்போடப்பட்ட பரீட்சைகள் சுகாதார முறைப்படி நடாத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரப்பரீட்சை போன்றன சுகாதார முறைப்படி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று சாதாரண தர பரீட்சை  ஆரம்பமாகியுள்ளது.  மாணவர்கள் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பரீட்சைகளில் தோற்ற வழிகாட்டப்படவேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

மலையக மண்ணின் மகத்தான பொழுதுகள்

Image
    மலையகம் என்றதுமே நினைவுக்கு வருவது மலைகளும் நீர்வீழ்ச்சிகளும் தேயிலைத்தோட்டங்களுமே. ஆனால் மலையகமும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் பற்றியும் தாழ்நிலத்தில் வாழும் எம்மவர்களுக்கு விந்தையே.  அழகின் உறைவிடமாகவும் நாட்டின் முதுகெலும்பாகவும் மக்கள் வாழ்கின்ற மலையகத்தில் 3 நாட்கள் பயணித்த என் அனுபவம் இதோ! மலையக மண்வாசனை ஓர் புதுவித உணர்வைத்தர நண்பர் வீட்டாரின் தேனீருடனான வரவேற்பு இன்னமும் இதமாக இருந்தது. காலநிலைக்கு ஏற்ற கம்பளி உடையுடன் மலைச்சாரலில் தேயிலைத்தோட்டங்களுக்கிடையே ஒரு நடை பயணம். காலை கதிரவன் மூடு பனியில் முத்தமிடும் அழகும் பள்ளி செல்லும் குழந்தைகளின் அழகும் தேயிலை கொய்ய பெண்கள் கூடையுடன் மலையேறும் அழகும் தனியழகுதான். செல்லும் வழியில் கங்காணியை சந்திக்கும் வாய்ப்புக்கிட்ட அவரிடம் வேலை நேரம், இடைவேளை, விடுமுறை, சம்பளம், ஓய்வுக்காலம், தேயிலை பராமரிப்பு, உற்பத்தி, ஏற்றுமதி என பல விடையம் அறிய முடிந்தது.  8-4 மணிநேர வேலை, 1-2 இடைவேளை, சனி,ஞாயிறு விடுமுறை, 1கிலோ கொழுந்து எடுக்க 50 ரூபாய், மாத சம்பளம் 10ம் திகதியும், முற்கொடுப்பனவு 25ம் திகதியும் கொடுக்கப்படுவதோடு...