Posts

Showing posts from February, 2021

இயற்கையுடன் ஓர் நடைபயணம்

Image

யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Image
             யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்புவிழா 24,25 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றது. கொரோனா காலகட்டத்தில் பல இடர்களின் மத்தியில் திட்டமிட்டபடி  உரிய சுகாதார பாதுகாப்புகளுக்கு அமைவாக இடம்பெற்ற இப் பட்டமளிப்புவிழா இம்முறை பல்கலைக்கழக மைதான அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டம் பெறுபவர் தவிர ஏனையவர்களுக்கு உள்நுளைவுக்கான அனுமதி சுகாதார பாதுகாப்பு நிமித்தமாக இரத்து செய்யப்பட்டது. 8 அமர்வாக இடம்பெற்ற பட்டமளிப்பு விழா மிக வெற்றிகரமாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தத்தில் இருந்து வெளிவர

Image
  இசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. நாம் கவலையாக இருக்கும்போது இசையே மருந்தாக அமையும். இன்றைய காலத்தில் அதிகமானோர் எதிர்கொள்ளும் சவால் மன அழுத்தமாகும். வேலைப்பழு,தூக்கமின்மை,ஏழ்மை என பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன் உச்சகட்டமாக தற்கொலை முயற்சிகளும் காணப்படும். இவற்றிலிருந்து விடுபட தியானம்,யோகா,இசை,பயணம் போன்றன மேற்கொள்ளலாம். இவை மனதிற்கு ஆறுதலைத் தரும்.

முறையற்ற திண்மக் கழிவகற்றல்

Image
திண்மக்கழிவகற்றல் நகரப்பகுதியைப் பொறுத்தவரை ஒரு பாரதூரமான சிக்கலாகவே காணப்படுகிறது. கிராமங்களில் அதிக பரப்பு காணிகளில் உக்கல் முறையிலோ சரியான முறையிலோ திண்மக்கழிவுகளை அகற்றமுடியும். ஆனால் நகர்ப்புறங்களில் மிகவும் கடினமான ஒன்றாகும்.  சீரற்ற திண்மக்கழிவகற்றலால் விலங்குகள் பறவைகள் பாதிக்கப்படுவதோடு சூழலும் அசுத்தமடைகின்றது. இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன. மக்கள் திண்மக்கழிவகற்றலில் சரியான கவனம் செலுத்துவது அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி நகரசபை திண்மக்கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்துவதிலும் மீள்சுழற்சி செய்வதிலும் கூடிய கவனம் காட்டவேண்டும்.  

உலக தாய்மொழி தினம்

Image
 

அதிகரித்து வரும் சட்டவிரோத காட்டு மரம் வெட்டுதல்

Image
                 இலங்கையில் இன்று அதிகம் பேசப்படுகின்ற பிரச்சினைகளில் ஒன்று சட்டவிரோத மரம் வெட்டுதல் ஆகும். இயற்கையின் கொடையான காடுகள் சூழல் சமநிலையில் முக்கிய பங்காற்றுகின்றன. எனினும் இக்காடுகளை அழிப்பதன் காரணத்தால் இன்று செயற்கையாக மரங்களை நாட்டி காடுகளை உருவாக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். அவ்வாறு இருந்தாலும் மனிதன் இன்றும் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டுதல், கடத்துதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதை நாம் அறியாமல் இல்லை.  வடமாகாணத்தில் அதிகளவு காடுகள் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் இன்று காட்டுமரம் வெட்டுதல் தொடர்பாக பல காடழிப்பை எதிர்நோக்கிவருகின்றது.                           விவசாயத்திற்காக காடழிப்பு என்பதையும் தாண்டி சட்டவிரோதமாக மரங்களை வெட்டி அதை விற்பனை செய்தலே அதிகமாக காணப்படுகின்றது. முல்லைத்தீவில் அதிகளவாக தேக்கு,முதிரை,பாலை வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக அறியமுடிகின்றது. இதன் பொருட்டு வனவள திணைக்களம் அதிகளவு கவனத்துடன் செயற்பட்டாலும் இரவு வேளைகளில் பலர் மரம் அற...