Posts

Showing posts from 2022

கேள்விக்குறியாகும் முல்லை மீனவர்களின் வாழ்வாதாரம் ?

Image
  மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு ஆகும் . அவ்வகையில் விவசாயம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு மீன்பிடியும் முக்கியமாகும் . மானிடம் தோன்றிய காலம் தொட்டு மக்களின் வாழ்வியலோடு இணைந்து பாரம்பரிய கதை பேசும் தொழில்களில் ஒன்றாக மீன்பிடி காணப்படுகின்றது . எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து உலகம் நவீன மறைந்தாலும் இன்றும் பாரம்பரிய தொழில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளன இலங்கையைப் பொறுத்தவரையில் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவு என்பதால் மீன்பிடியில் குறிப்பிட்டதொரு இடத்தினை பெற்றுள்ளது இலங்கையில் மீன்பிடித்தொழில் மூலம் உள்நாட்டு மக்களின் கடல் உணவு தேவை பூர்த்தி செய்யப்படுவது மட்டுமன்றி வெளிநாட்டு ஏற்றுமதியும் இடம்பெற்று வருகின்றது . இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு பிரதேசமானது மருதமும் முல்லையும் இணைந்த கடல் வளமும் மண் வளமும் கொண்ட பூமியாக விளங்குகின்றது இங்கே விவசாயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது அதேபோன்றே மீன்பிடியும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது . முல்லைத்தீவு மீன்பிடியை பொருத்தமட்டில் யுத்தத்திற்கு முன்னைய காலத்தில் அதிகளவான வருமா...

வாசிப்பின் அவசியமும் நூலக உருவாக்கமும்

Image
  வாசிப்பை ஊக்குவித்தலும் நூலக உருவாக்க முயற்சியும்      ‘ சமூகத்தில் இல்லாதவற்றை செய்ய விளைவது அபிவிருத்தி அல்ல , சமூகத்தின் தேவையை கண்டறிந்து அதனை செய்வதே ஒரு பயனுள்ள அபிவிருத்தி ’   அந்த வகையில் இது வாசிப்பு மாதம் ஆகையால் வாசிப்பும் நூலகமும் தொடர்பாக பார்ப்பது பயனாக இருக்கும் . வாசிப்பு ஏன் முக்கியம் என்ற கேள்வி உங்களில் பலருக்கும் எழலாம் . ஏன் நாங்கள் வாசிப்பது இல்லையா என்று கூட நீங்கள் கேள்வி எழுப்பலாம் . ஆம் தினமும் திறன்பேசிக்குள் மூழ்கித் திழைக்கும் நாம் அதனூடாக பல விடயங்களை அறிகின்றோம் . ஆனால் புத்தகங்களை நேரம் ஒதுக்கி எத்தனைபேர் வாசிக்கிறோம் என்றால் அது கேள்விக்குறிதான் . ஒருவர் புத்தகத்தைத் தொட்டுணர்ந்து அதை வாசித்துப் பயனடைவது போன்று வேறு எவ்வழியில் வாசிப்பதாலும் திருப்திபெற முடியாது . காரணம் நூல் தலைசிறந்த நண்பன் என்பார்கள்   சிறந்த நண்பன் ஒருவன் எமக்கு அருகில் இருந்து எம்மை சரியாக வழிநடத்துவது போன்ற உணர்வை ஒரு நல்ல புத்தகத்தால் தர முடிகின்றது . இ...

குப்பைகளை முறையாக அகற்றாததால் தூய்மையை இழக்கும் யாழ் மாநகரம்

Image
  யா ழ் மாநகர சபைக்கு உட்பட்ட 27  கிராம சேவகர் பிரிவின் கீழுள்ள பிரதான பகுதிகளில் குப்பைகளை முறையாக அகற்றாமை அந்நகரத்தின் தூய்மையை இழக்கச் செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பிரதானமாக யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடம், வைத்தியசாலை பின்புறம், பிரதான புகையிரத நிலைய வீதி, யாழ் பல்கலைக்கழக வீதிகள், பிரதான கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குப்பைகள் வீதிகளில் நிறைந்திருப்பது அருவருக்கத்தக்க செயலாகக் காணப்படுகின்றது.  இதனால் ஏற்படும் விளைவுகள்: சிறுவர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாற்று வலுவுள்ளோர் போன்றோரையும் கால்நடைகளையும் பெரும் தாக்கத்திற்கு உட்படுத்துகின்றது. மக்கள்; தமது தேவைகளை நிறைவு செய்வதற்கு செல்லும் இடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தமக்கு அருவருப்பு தன்மையையும், போக்குவரத்து தடையையும், நோய்த்தொற்று அபாயத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.  கால்நடைகளும் இந்தப்பிரச்சினையிலிருந்து விடுபடவில்லை – வீதிகளில் வீசப்பட்ட குப்பைகளை உண்டு உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாயுள்ளது. குப்பை போடப்பட்ட வீதியோரம் ...